Latest Movie :
Recent Movies
Showing posts with label International. Show all posts
Showing posts with label International. Show all posts

ரஷ்ய வரலாற்றில் ஜனாதிபதி, பதவிக்காக போட்டியிடும் முதலாவது முஸ்லிம்!


ரஷ்யாவில் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் அந்நாட்டின் தற்போதைய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை எதிர்த்து போட்டியிடவுள்ளளார் சகோதரி அய்னா கம்ஸ்டோவா, ரஷ்ய வரலாற்றில் ஜனாதிபதி பதவிக்காக போட்டியிடும் முதலாவது முஸ்லிம் என்ற பெருமையையும் இவர் பெறுகிறார்

ரஷ்யாவின் பிரபல முப்தியான அஹ்மத் அப்துல்லாவை திருமணம் செய்துள்ள 46 வயதான அய்னா கம்ஸடோவா, அந்நாட்டின் முன்னணி ஊடகவியலாளராவார்.

islam.ru எனும் இணையதளத்தின் ஆசிரியரான இவர் பல நூல்களையும் எழுதி வெளி யிட்டுள்ளார். அத்துடன் சமூக நலப் பணிகளை முன்னெடுக்கும் கொடை வள்ளலுமாவார்

ரஷ்யாவில் ஜனாதிபதித் தேர்தலில் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்காத கட்சிகள் சார்பில் போட்டியிடும் ஒருவர் 1 இலட்சம் மக்களின் கையொப்பத்தை தனக்கு ஆதரவாக சேகரித்து வழங்க வேண்டும்.

ரஷ்ய வரலாற்றில் ஜனாதிபதி, பதவிக்காக போட்டியிடும் முதலாவது முஸ்லிம்!

ஆனால் அய்னாவுக்கு இதுவரை சுமார் 3 இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் கையொப்பமிட்டு நாடெங்கிலுமிருந்து தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர்.

அய்னா தோல்வியடைந்தாலும் கூ ஹிஜாப் அணிந்த பெண்கள் வெறுமனே ஒரு தாயோ அல்லது ஒரு பெண்ணோ மாத்திரமன்றி நன்றாக கல்வி கற்றவர் களும் மதிப்புக்குரியவர்களும்தான் எனும் செய்தியை முழு உலகுக்கும் சொல்ல இது நல்ல சந்தர்ப்பம் என்று ரஷ்ய ஊடகங்கள் கருத்து வெளியிட்டுள்ளன.

{[['']]}

எலும்புக் கூடுகளில் எது சன்னி, எது ஷியா? 'சிரியா மண்ணே சிரி' - வைரமுத்துவின் கவிதை வீடியோ

'சிரியா மண்ணே சிரி' என்ற தலைப்பில் அந்நாட்டில் நடக்கும் அவலங்கள் பற்றிய கவிதையை வீடியோ வடிவில் வெளியிட்டிருக்கிறார் கவிஞர் வைரமுத்து.

சிரியாவில் ஷியா பிரிவைச் சேர்ந்த அதிபர் ஆசாத்துக்கும் சன்னி முஸ்லிம் பிரிவைச் சேர்ந்த கிளர்ச்சிப் படைகளுக்கும் இடையே 6 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டுப் போர் நடைபெறுகிறது. தலைநகர் டமாஸ்கஸ் அருகேயுள்ள கிழக்கு கவுட்டா பகுதி கிளர்ச்சிப் படையின் கட்டுப்பாட்டில் உள்ளது. அந்தப் பகுதியை குறிவைத்து அதிபர் ஆசாத் படைகள் கடந்த இரு வாரங்களாக வான்வழி தாக்குதலை நடத்தி வருகின்றன.

அதிபர் ஆசாத்துக்கு ஆதரவாக ரஷ்ய விமானப்படை நேரடியாக போரில் ஈடுபட்டு வருகிறது. ஐ.நா. சபையில் சிரியாவுக்கு எதிராக கொண்டு வரப்படும் தீர்மானங்களை ரஷ்யா தடுத்து வருகிறது என்று அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் குற்றம்சாட்டி வருகின்றன.

தமிழகத்தில் பலரும் சிரியாவில் நடக்கும் போரை நிறுத்தக் கோரி அங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் சிரியாவில் நடக்கும் போர் குறித்து கவிஞர் வைரமுத்து கவிதை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

'சிரியா மண்ணே சிரி' என்ற தொடங்கும் அவ்வீடியோ இதோ...
{[['']]}

வடகொரிய அணு ஆயுத பயன்பாடு உலக அமைதிக்கு அச்சுறுத்தல்

உலக ஊடகவியலாளர் மாநாடு தென் கொரியாவின் சியோல் நகரில் அமைந்துள்ள கொரிய ஊடகவியலாளர் மையத்தில் நாளை  திங்கட்கிழமை ஆரம்பமாக உள்ளது . 

தென்கொரிய வெளிவிவகார அமைச்சர் கெங் கியோங் ஹா தலைமையில் இடம்பெறவுள்ளது. பன்னாடுகளை சேர்ந்த ஊடகவியலாளர்கள் இந்த மாநாட்டில் கலந்துகொள்ள உள்ளனர் .

கொரிய தீபகற்பப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள  அச்சுறுத்தலான நிலைமையினால் உலக அமைத்திக்கு ஏற்படக்  கூடிய ஆபத்தினை கருத்தில் கொண்டு நிலையான அமையை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை உலகிற்கு வலியுறுத்தும் வகையிலேயே இந்த உலக ஊடகவியலாளர் மாநாடு ஏற்பாடு செய்யப்படட்டுள்ளது.

இந்நிலையில்  கொரிய தீபகற்பத்தின் அணு ஆயுதக் குறைப்பு  தொடர்பில்  உலக ஊடகவியலாளர்களின் பங்ககளிப்பு என்ற தொனிப்பொருளில் ஒரு வார காலம் இந்த மாநாடு இடம்பெறவுள்ளது. இதன் போது நிலையான அமைதியை நோக்கிய கொரியாவின் பன்னாடுகளுடனான இராஜதந்திர உறவுகள் மற்றும் வெளிவிகார கொள்ளை உள்ளிட்ட கொரியாவின் தேசிய பொருளாதரம் மற்றும் கலாசாரம் என்பவை குறித்தும் இதன் போது தெளிவுப்படுத்தப்படவுள்ளது.

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் கவனத்திற்குட்பட்டுள்ள வட கொரிய அணு ஆயுத பயன்பாடு குறித்து உலக நாடுகளின் ஊடகயவியலாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதே தென் கொரியவின் எதிர்பார்ப்பாக உள்ளது.  ஆனால் வட கொரியாவின் தொடர் அச்சுறுத்தலான நடவடிக்கைகள் கவலையளிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.

முழு அமெரிக்கா கண்டத்தையும் அடையக் கூடிய புதிய வகை கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை வெற்றிகரமாக சோதித்துள்ளதாகவும் ஒரு அணு ஆயுத நாடாக மாற வேண்டும் என்ற குறிக்கோளை வட கொரியா அடைந்துள்ளதாகவும் அந்நாட்டு அரசு தொலைக்காட்சி இவ்வாறான நெருக்கடியான சூழலில் அறிவித்தமை உலக நாடுகளை  ஆச்சரியப்படவும் அச்சத்திற்குள்ளாக்கும் வகையிலும் அமைந்ததுள்ளதாக தென் கொரியா குறிப்பிட்டுள்ளது.

மேலும் மிகவும் சக்தி வாய்ந்தது என கூறப்பட்ட ஹவாசாங்-15 ஏவுகணையையும் இந்த சூழலில் ஏவியிருந்தது. ஜப்பான் கடலில் விழுந்த இந்த ஏவுகணை வட கொரியா முன்பு சோதித்த ஏவுகணைகளை விட அதிக உயரம் பறந்தது என சர்வதேச செய்திகள் உறுதிப்படுத்தின.

இந்நிலையில் தென்கொரியாவின் பியோங்சாங்கில் இடம்பெற்ற  குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் வட கொரியத் தலைவர் கிம் ஜாங்-உன்னின் தங்கை கிம் யோ-ஜாங் கலந்து கொண்டார் .


மூத்த உறுப்பினரான கிம் யோ-ஜாங் தான் தென்கொரியா செல்லும் முதல் கிம் குடும்ப உறுப்பினர். குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் வட கொரியா கலந்து கொள்வது இருதரப்பு உறவுகளில் நிலவும் பதற்றத்தைத் தணிக்கும் என்று கருதப்பட்டது. இரு கொரிய நாடுகளும் தொடக்க நிகழ்ச்சியில் ஒரு கொடியின் கீழ் அணி வகுத்துச் செல்வது நிலையான அமைதிக்காக சமிஞ்சை என கருதப்பட்டது.

ஆகவே உலக நாடுகள் இந்த விடயத்தை கவனத்தில் கொள்ள வேண்டும் என உலக நாடுகளிடம்   தென் கொரியா கேட்டுக்கொண்டுள்ளது. இவ்வாறானதொரு  சூழ்நிலையில் நாளை ஆரம்பிக்கப்படவுள்ள உலக ஊடகவியலாளர் மாநாடு முக்கியமான ஒன்றென கொரிய ஊடகயவியலாளர் மையம் குறிப்பிட்டுள்ளது.

{[['']]}

பூமியை விட மூன்று மடங்கு அதிகம் தண்ணீர் கொண்ட புதிய கிரகம் கண்டுபுடிப்பு!

பூமியை விட மூன்று மடங்கு அதிகம் தண்ணீர் கொண்ட கிரகம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அங்கு மனிதர்கள் வாழமுடியாத என தெரிவிக்கப்படுகிறது.

இதன் பெயர் 'டபுள்யூஏஎஸ்பி-39 பி' என்பதாகும். இது பூமியில் இருந்து 700 ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கிறது. நாசா விஞ்ஞானிகள் இந்த கண்டுபிடிப்பை நிகழ்த்தி இருக்கிறார்கள்.

அந்த கிரகத்தில் இருந்து தண்ணீர் ஆவி ஆவதை வைத்தும் அது எதிரொளிக்கும் நிறத்தை வைத்தும் இந்த கண்டுபிடிப்பு நிகழ்த்தப்பட்டு இருக்கிறது. இந்த கிரகத்தில் சனி பூமியை விட அதிக அளவு தண்ணீர் இருக்கிறது. 

சனி கிரகத்தில் அளவை வைத்து கணக்கிட்டால் அதை விட 3 மடங்கு தண்ணீர் இந்த கிரகத்தில் இருக்கிறது. இதுவரை நாசா கண்டுபிடித்த எந்த கிரகத்திலும் இந்த அளவிற்கு தண்ணீர் இருந்தது இல்லை. அதேபோல் இந்த கிரகமும் அதன் சூரிய குடும்பத்திலேயே இருக்கிறது.

இதற்கு டபுள்யூஏஎஸ்பி-39 என்று பெயர் வைக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் சூரிய குடும்பத்தில் எத்தனை கிரகம் இருக்கும் என்று கூறப்படவில்லை. ஆனால் இந்த கிரகம் சூரியனை 4 நாட்களுக்கு ஒரு முறை சுற்றுகிறது. இந்த கிரகம் சூரியனை சுற்றினாலும் தன்னை தானே பூமியை போல சுற்றுவது இல்லை. இதனால் இதன் ஒரு பகுதி எப்போதும் வெயிலாக இருக்கும். 

ஒரு பகுதி எப்போதும் இருளாக இருக்கும். அதாவது ஒரு பகுதி சூரியனை பார்த்துக் கொண்டு இருக்கிறது. வெப்பம் பூமிக்கும் சூரியனுக்கும் எவ்வளவு தூரம் இருக்குமோ அதைவிட 20 மடங்கு குறைந்த தூரம் இந்த கிரகத்திற்கும் அதன் சூரியனுக்கும் இருக்கிறது. 

இதனால் சூரியன் படும் பகுதியில் 776.7 டிகிரி வரை வெப்பம் இருக்கிறது. இதனால் அங்கு மனிதர்கள் வாழ முடியாது. ஆனால் வேறு உயிரினம் வாழ வாய்ப்புகள் இருக்கிறது.



{[['']]}

சிரியாவில் தொடரும் போர்- இதுவரை 674 பேர் பலி, இன்னும் அதிகரிக்கலாமென கவலை

சிரியாவின் கிழக்கு குவாத்தா நகரில் கடந்த 13 நாட்களாக தொடர்ந்து  இடம்பெற்று வரும் மோதல்களில் சிக்கி இதுவரை 674 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

இதேவேளை, இந்த எண்ணிக்கை இன்னமும் அதிகரிக்கலாமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.சிரியாவில் தொடரும் போர்- இதுவரை 674 பேர் பலி, இன்னும் அதிகரிக்கலாமென கவலை

சிரியாவில் அந்நாட்டு ஜனாதிபதி பஷார் அல் அசாத்திற்கு எதிராக கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டு யுத்தம் இடம்பெற்று வருகிறது.

சிரியாவில் கிளர்ச்சியாளர்களின் வசமிருந்த பகுதிகளில் பல பகுதிகள் தற்போது, சிரிய இராணுவம் கைப்பற்றியுள்ளது. இந்தநிலையில், கிளர்ச்சியாளர்கள் வசமிருக்கும் ஒரே ஒரு பகுதியாக கிழக்கு குவாத்தா நகர் காணப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து இந்த பகுதியை கைப்பற்றுவதற்கான நடவடிக்கைகளை ரஷ்யாவின் ஆதரவுடன் சிரிய இராணுவம் முன்னெடுத்து வருகிறது. கடந்த 13 நாட்களாக யுத்த நிறுத்தங்கள் போன்ற அறிவிப்புக்களுக்கு மத்தியிலும் தொடர்ந்து தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு தாக்குதல்கள் தொடர்ந்து இடம் பெற்று வருவதினால், அங்கு சிக்கியிருக்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை முன்னெடுப்பதில் சிரமங்கள் காணப்படுகிறதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த தாக்குதல்கள் தொடர்பில் சர்வதேசம் அமைதிகாத்து வருவதாக அந்நாட்டு மக்கள் விசனம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


{[['']]}

இரசாயண தாக்குதலுக்கும் எமக்கும் எதுவித தொடர்பும் இல்லை - வடகொரியா

சிரியாவில் நடத்தப்பட்ட இரசாயன தாக்குதலுக்கும் தமக்கும் எந்த வித தொடர்பும் இல்லை என வட கொரியா அறிவித்துள்ளது.

சிரியாவுக்கு இராசாயண ஆயுதங்கள் தயாரிப்பபதற்கான பொருட்களை வடகொரியா வழங்குவதாக தெரிவிக்கப்பட்டமையை தொடர்ந்தே வடகொரியா இவ்வாறு தெரிவித்துள்ளது.

இரசாயன ஆயுதங்களை தயாரிப்பதற்கு தேவையான உபகரணங்களை சிரியாவிற்கு வடகொரியா அனுப்பியுள்ளதாக அண்மையில் அமெரிக்க ஊடகமொன்று செய்தி வெளியிட்டிருந்தது.

அத்துடன் இது தொடர்பிலான அறிக்கையொன்றையும் ஐ.நா வெளியிட்டுள்ளதாகவும் குறித்த ஊடகம் வெளியிட்ட செய்தியில் குறிப்பிட்டிருந்தது.

இந்த நிலையில் குறித்த குற்றச்சாட்டுக்களுக்கு வடகொரியா மறுப்பு தெரிவித்துள்ளதுடன், தமது நாட்டிற்கு அழுத்தங்களை கொடுப்பதற்காக ஐக்கிய நாடுகள் சபையால் கட்டவிழ்த்து விடப்பட்ட கற்பனைக் கதை இது என்றும் குறிப்பிட்டுள்ளது.

தமது குடியரசு இரசாயன ஆயுதங்களை தயாரிப்தும் விநியோகிப்பதும் இல்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளது. அத்துடன் இரசாயன ஆயுதங்களை எதிர்ப்பதாகவும் வடகொரியா தெரிவித்துள்ளது.

எனினும், கடந்த ஆறுமாதங்களில் சிரிய அரச நிறுவனங்களுக்காக சென்ற வடகொரியாவின் இரண்டு கப்பல்கள் இடைமறிக்கப்பட்டதாக ஐக்கிய நாடுகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


{[['']]}

சிரியாவில் கொப்புளிக்கும் இரத்த ஊற்று! #1

சிரியாவைப் பற்றி சமீபநாட்களாக சமூக வலைத்தளங்களில் அதிகமாக விவாதிக்கப்படுகிறது. அந்த நாட்டில் ஏதோ சில நாட்களாகத்தான் பச்சிளம் குழந்தைகள் கொல்லப்படுவதைப் போல பரிதாபப்படுகிறார்கள்.

அரபு உலகில் சிரியா மட்டுமல்ல, லெபனான், பாலஸ்தீனம், இராக், எகிப்து என்று எத்தனையோ நாடுகள் கடந்த காலங்களில் கொடூரமான படுகொலைகளைச் சந்தித்திருக்கின்றன.

அப்போதெல்லாம் பொங்காத மனிதாபிமானம் இப்போது ஊற்றெடுப்பதற்கு உலகளாவிய பல்வேறு அரசியல் காரணங்கள் இருக்கின்றன. அவற்றை அறிந்துகொள்வதற்கு முன் சிரியாவின் முன்கதையை கொஞ்சம் அறிந்துகொள்வது நல்லது.

கி.மு.10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே சிரியா நாகரிகத்தின் இருப்பிடமாக கருதப்பட்டிருக்கிறது.

ஆனால், நவீன சிரியா முதல் உலகப்போருக்கு பின்னரே உருப்பெற்றது. இன்றைய லெபனான், இஸ்ரேல், பாலஸ்தீனம், ஜோர்டானின் சில பகுதிகளையும் உள்ளடக்கிய பெரிய நாடாக இருந்த சிரியா, முதல் உலகப்போர் மற்றும் இரண்டாம் உலகப்போர் முடிவில் வல்லரசுகளால் கூறுபோடப்பட்டது.

முதல் உலகப்போர் சமயத்தில் ஒட்டாமன் பேரரசில் சிரியா இணைந்திருந்தது. போரின்போது ஒட்டாமன் மற்றும் அதன் கூட்டுப்படையினர் ஆர்மீனியின் இனப்படுகொலை, அஸ்ஸிரியன் இனப்படுகொலைகளை நடத்தினர். கொல்லப்பட்ட அனைவரும் கிறிஸ்தவர்களாக இருந்தனர்.

போரின் முடிவில் ஒட்டாமன் பேரரசை இரண்டாக கூறுபோட்டனர். பிரான்சிடம் இருந்து 1936 ஆம் ஆண்டு விடுதலை பெற்று சிரியா குடியரசாகியது. ஆனால், பிரான்சும் சிரியாவும் ஏற்படுத்திய விடுதலை ஒப்பந்தத்தை அந்த நாட்டு நாடாளுமன்றம் ஏற்கவில்லை.

அதன்பிறகு இரண்டாம் உலகப்போர் முடிவில் 1946ல்தான் பிரான்ஸ் ராணுவம் சிரியாவிலிருந்து வெளியேறியது. அதற்கு முன்னதாக நாட்டை தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு குடியரசின் கையில் ஒப்படைத்தது. குடியரசு ஆனபிறகு 1948 ஆம் ஆண்டு சிரியா படைகள் பாலஸ்தீனத்திற்குள் புகுந்து யூத குடியிருப்புகளை நொறுக்கியது. இஸ்ரேல் உருவாவதை தடுக்கவே இந்த போர் நடத்தப்பட்டது. ஆனால், போர் வெற்றிபெறவில்லை. இதையடுத்தே சிரியா அரசு ராணுவப்புரட்சியால் தூக்கியெறியப்பட்டது. அரபுநாடுகளில் நடைபெற்ற முதல் ராணுவப்புரட்சி என்று இதை கூறுகிறார்கள். ஆனால், அதன்பிறகு அங்கு அடுத்தடுத்து பல ராணுவப் புரட்சிகள் நடைபெற்றன. 1954 ஆம் ஆண்டு நடைபெற்ற ராணுவப் புரட்சிக்குப் பிறகு நாட்டின் நாடாளுமன்ற நடைமுறைகள் சீரமைக்கப்பட்டன.

அந்தச் சமயத்தில் எகிப்தில் அதிபராக நாசர் பதவியேற்றார். அதையடுத்து நாஸரிஸம் என்ற புதிய கோட்பாடு அரபுநாடுகளுக்கு அறிமுகமாகியது. 1956 ஆம் ஆண்டு சூயஸ் கால்வாய் பிரச்சனை உருவானபோது சிரியா அரசு சோவியத் யூனியனுடன் பாதுகாப்பு உடன்படிக்கை செய்துகொண்டது. இது துருக்கி உள்ளிட்ட அரபு நாடுகளுக்கு கவலையை ஏற்படுத்தியது. ஆனால், அதுபோல எதுவும் நிகழவில்லை.

இந்நிலையில்தான் 1958 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி அன்றைய சிரியா ஜனாதிபதி சுக்ரி அல் குவாட்டிலும் எகிப்து அதிபர் நாஸரும் ஒரு உடன்பாடு செய்துகொண்டனர். அதன்படி, எகிப்தும் சிரியாவும் இணைந்து ஐக்கிய அரபு குடியரசை உருவாக்க முடிவு செய்தனர்.

இதைத்தொடர்ந்து சிரியாவில் உள்ள மற்ற கட்சிகளும், கம்யூனிஸ்ட்டுகளும் வெளிப்படையான நடவடிக்கைகளை நிறுத்திக்கொண்டனர். சிரியா கம்யூனிஸ்ட் கட்சி என கருதப்படும் பாத் கட்சி நிர்வாகிகள் ஒரு ரகசிய ராணுவத்தை அமைத்தனர். அதன் தலைவர்களாக முகமது உம்ரன், சலாஹ் ஜாடிட், ஹஃபேஸ் அல் ஆஸாத் ஆகியோர் செயல்பட்டனர்.

இந்த ராணுவக்குழு நடத்திய திடீர் புரட்சியில் எகிப்து-சிரியா உடன்பாடு முறிந்தது. ஆனால், மீண்டும் சிரியாவில் ராணுவப்புரட்சிகளுக்கு வழி வகுத்தது. பாத்கட்சியின் ராணுவக்குழுவில் இடம்பெற்ற ஹஃபேஸ் தனது தோழரான ஸலாஹ் ஜாடிட்டை வெளியேற்றிவிட்டு ஆட்சியைக் கைப்பற்றினார்.

இவருடைய ஆட்சியில் ராணுவம் பலமிக்கதாக மாற்றப்பட்டது. பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக இஸ்ரேலுடன் சண்டையில் ஈடுபட்டார். அவருக்கு எகிப்தும் உதவி செய்தது. இஸ்ரேலுடன் போர் பின்னர் லெபனானை நோக்கித் திரும்பியது.

1976 ஆம் ஆண்டு தொடங்கிய லெபனான் மீதான தாக்குதல் 30 ஆண்டுகள் நீடித்தது. ஜனாதிபதி அல் ஆஸாத் திடீரென தனது நிலைப்பாட்டை மாற்றி வளைகுடாப் போரில் இராக்கிற்கு எதிராக அமெரிக்காவுடன் இணைந்து சண்டையில் ஈடுபட்டார். 2000ம் ஆண்டு ஜனாதிபதி அல் ஹஃபேஸ் மரணம் அடைந்தார். அதைத் தொடர்ந்து அவருடைய மகன் பஷர் அல் ஆஸாத் எதிர்ப்பே இல்லாமல் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இவர் தனது தந்தையைப் போலில்லாமல் அமெரிக்க ஆதரவு நிலைப்பாடு எடுப்பார் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால், தொடர்ந்து ரஷ்ய ஆதரவு நிலையையே மேற்கொண்டார். அந்த அளவுக்கு சிரியா மீதான எதிரிகளின் தாக்குதல் அதிகரித்தது. 1991 ஆம் ஆண்டு சோவியத் யூனியன் சிதறியபிறகும் ரஷ்ய ஆதரவு நாடுகளை தனது பக்கம் இழுக்கும் அமெரிக்க முயற்சி தோல்வியில் முடிந்தது.

உள்நாட்டுக் கலகங்களையும், பக்கத்து நாடுகளின் நெருக்குதல்களையும் அமெரிக்கா தனது ஆயுதமாக பயன்படுத்தியது. ஆனாலும், சிரியா அரசு அனைத்து எதிர்ப்புகளையும் ராணுவரீதியாகவே சந்தித்தது. சிரியாவில் வடகொரியா தொழில்நுட்பத்துடன் அணுஉலை தொடங்கப்படுவதாகக் கூறி விமானத் தாக்குதல் நடத்தப்பட்டது.

ஆனால், சிரியாவில் அதுபோல ஒரு அணுஉலை இருந்ததா என்பதை சர்வதேச அணுசக்தி கமிஷன் ஏஜென்சியால் நிரூபிக்க முடியவில்லை. இருந்தாலும், இன்றுவரை வடகொரியாவின் ஆயுதஉதவியை சிரியா பெறுவதாக தொடர்ந்து வதந்திகளைப் பரப்பப்படுகிறது.

2005 ஆம் ஆண்டு லெபனானில் இருந்து சிரியா வெளியேறியது. அதன்பிறகும் சிரியாவில் இஸ்லாமிய மதக்குழுக்களுக்குள் மோதல்கள் நீடித்தே வந்தன. அதாவது அரபு நாடுகளுக்கே உரிய அத்தனை லட்சணங்களுடன் சிரியாவும் பயணத்தை தொடர்ந்தது.

இந்தக் காலகட்டத்தில்தான் தென்னமெரிக்க நாடுகளில் முன்னாள் கம்யூனிஸ்ட்டுகள் பல்வேறு நாடுகளின் ஆட்சிப் பொறுப்பை கைப்பற்றத் தொடங்கினர். குறிப்பாக வெனிசூலாவில் இருந்து அமெரிக்க எண்ணெய் நிறுவனங்களை ஜனாதிபதி சாவேஸ் வெளியேற்றினார்.

இதையடுத்து, இராக்கை கபளீகரம் செய்ய அமெரிக்கா திட்டமிட்டு யுத்தத்தை தொடங்கியது. அங்கும் ஸன்னி, ஷியா பிரிவு முஸ்லிம்களின் மோதலை தனக்குச் சாதகமாக மாற்றிக்கொண்டது அமெரிக்கா.

எண்ணெய் ஊற்றுக்காக அரபு நாடுகளை ரத்தக்களறியாக்கும் அமெரிக்காவின் தொடர் முயற்சிகளை அடுத்த அத்தியாத்திலும் பார்க்கலாம்




{[['']]}

எங்கள் நிலை இன்னொரு இனத்திற்கு வேண்டாம்; சிரியாவில் நிகழும் மானுடப் படுகொலையை உடனே தடுத்து நிறுத்த வேண்டும்: சீமான்

சிரியாவில் நிகழும் மானுடப் படுகொலையை உடனே தடுத்து நிறுத்த வேண்டும். செஞ்சிலுவைச் சங்கத்தினை அனுப்பி காயம்பட்டிருக்கிற அம்மண்ணின் மக்களைக் காக்க வேண்டும்! என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் இன்று (28-02-2018) விடுத்துள்ள அறிக்கை:   ‘’சிரியா நாட்டில் அரசப்படைகளுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் மூண்டுள்ளப்போரில் அந்நாட்டின் அப்பாவிப் பொதுமக்கள் பலியிடப்பட்டுக் கொண்டிருப்பது பெருத்த மனவேதனையும், அளவற்றத் துயரத்தையும் தருகிறது. 

அங்குள்ள கிழக்கு கோட்டா பகுதியில் சிரியா அரசப்படைகள் நடத்துகிற விமானத் தாக்குதல்களால் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என அனைவரும் கொல்லப்பட்டு கொண்டிருக்கிற படங்கள் சமூக வலைத்தளங்களில் வலம்வந்து ஒட்டுமொத்தத் தமிழர்களைக் கண்ணீரில் ஆழ்த்தியிருக்கின்றது. 

சிரியாவில் நடத்தப்படும் தாக்குதல்கள் யாவும் ஈழத்தில் எமது இனத்திற்கு நிகழ்த்தப்பட்ட கோர இனப்படுகொலையை நினைவூட்டி மீண்டும் அக்கொடுமையான காலக்கட்டத்திற்கு இட்டுச்செல்கின்றது. மரண ஓலத்தோடு கண்ணீரும் கம்பலையுமாக அலறித் துடிக்கிற அம்மக்களின் படங்கள் யாவும் எங்களது மனசாட்சியை உலுக்கி எடுக்கின்றன; ஈழத்தாயகத்தில் மீது போர் நிகழ்த்தப்பட்டது போல எங்களை அறியாமலே எங்களது கண்களில் நீர் பெருக்கெடுத்து, சிரிய மக்களுக்காக தமிழர்கள் எங்களது மரபணுக்கள் துடிக்கிறது. 

சிரியா மக்கள் எமது மொழியையும், எமது இனத்தையும் சாராதவர்களாக இருக்கலாம். ஆனால், அவர்கள் எம்மைப் போல எலும்பும், நரம்பும், ஊனும், உடலும், பசியும், உறக்கமும்,கனவும் கொண்ட சக மனிதர்கள். ஆகவே, அந்த மாந்தநேயப் பற்றாலேயே நாங்கள் அம்மக்களுக்காகக் குரலெழுப்புகிறோம்.

அலெப்போ நகரில் நடத்தப்பட்டத் தாக்குதலில் படுகாயமுற்ற 5 வயது சிறுவன் ஒம்ரான் இரத்தம் தோய்ந்த உடலோடு அவசர ஊர்தியில் அமர்ந்திருக்கிற படமானது எங்களது பிள்ளை பாலச்சந்திரனை நினைவூட்டுகிறது. இந்நூற்றாண்டில் ஒரு பாரிய இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டு உறவுகளைப் பறிகொடுத்து உலகெங்கும் அகதியாக ஓடித்திரிகிற இனத்தின் மக்களான தமிழர்கள் எங்களுக்குத்தான் இனப்படுகொலை ஏற்படுத்தும் வலியும், வேதனையும், காயமும், ரணமும், தெரியும். தமிழர்கள் நாங்கள் அக்கொடுமையினை எங்கள் வாழ்வில் அனுபவித்தோம். 

எங்கள் உறவுகள் துள்ளத்துடிக்க ஈழ நிலத்தில் கொல்லப்படும்போது அதனைத் தடுத்து நிறுத்த வலிமையற்ற அனாதைகளாய், உடன்பிறந்தவர்களின் உயிர்களைப் பறிகொடுத்த நடைபிணங்களாய் நாங்கள் நிர்கதியற்று நின்றோம். அதன்மூலம் ஏற்பட்ட குற்றவுணர்ச்சியும், பெரும் காயமும், ஆறாத ரணமும் இன்றைக்கு எங்கள் உள்ளங்களில் வன்மமும், வெறியுமாக உரமேறிக்கொண்டிருக்கிறது. எங்களுக்கு இழைக்கப்பட்ட அக்கொடுமையும், அநீதியும் இன்னொரு இன மக்களுக்கு வேண்டாம் என்றுதான் தமிழர்கள் நாங்கள் மன்றாடுகிறோம்; எங்கள் நிலை இன்னொரு இனத்திற்கு வேண்டாம் என்றுதான் தமிழர்கள் நாங்கள் கூக்குரலிட்டு கண்ணீர் வடிக்கிறோம்.

உலகத்தீரே! அங்கு கொலைசெய்யப்படுகிற பிஞ்சுக் குழந்தைகளின் முகங்கள் உங்கள் பிள்ளைகளின் முகங்களை நினைவூட்டவில்லையா? அங்கு கதறும் தாய்மார்களின் முகங்கள் உங்களது தாயை ஒத்திருக்க வில்லையா? அங்கு எழும் மரண ஓலமும், கதறல் சத்தமும், மனித உயிரின் வலியும் உங்களது தூக்கத்தைத் தொலைக்கவில்லையா? அந்த மக்களின் இரத்த வாடை உங்கள் நாசிகளில் ஏறவில்லையா? 

எங்களைக் காப்பதற்கு யாருமே இல்லையா என்பது போல இருகரம் நீட்டி நம்மிடம் உயிர்ப்பிச்சை கேட்கும் அம்மக்களின் அழுகுரல் உங்கள் செவிப்பறைகளைக் கிழிக்கவில்லையா? தாங்கள் எந்த நாட்டில் பிறந்திருக்கிறோம் என்றுகூட தெரிந்திராத பிஞ்சுக்குழந்தைகள்கூட கரிக்கட்டையாக்கப்பட்டு கொல்லப்படுவதை கண்டும் காணாதது போல எவ்வாறு நம்மால் கடந்துபோக முடிகிறது? 

இறை நம்பிக்கை கொண்டு, மானுடப்பற்றைப் போதித்து, அன்பு, இரக்கம், பரிவு, கருணை எனப் பேசியதெல்லாம் சக மனிதன் சாகிறபோது வேடிக்கைப் பார்ப்பதற்குத்தானா? மனிதநேயத்தைப் போதிக்கவும், மனிதர்களை நல்வழிப்படுத்தி நெறிப்படுத்தவும்தானே மதங்கள் தோன்றின. இன்று அம்மதத்தின் பெயராலேயே மனிதர்களைக் கொல்லுவதை எவ்வாறு ஏற்க முடியும்? மனிதர்களைக் கொன்றுவிட்டு மதத்தினைக் காத்து என்ன செய்யப் போகிறோம் உலகத்தீரே? 
எதற்கு இன்னும் கள்ள மௌனம் சாதிக்கிறீர்கள்? இராணுவத் தாக்குதலில் தன் தாய் இறந்துபோனதுகூட தெரியாது அத்தாயின் மார்பினைப் பசியோடு சவைத்துக் கொண்டிருந்த ஒரு பச்சிளங்குழந்தையின் படத்தினை இன்னொரு நிலத்தில் பார்க்கிற மனவலிமை தமிழர்கள் எங்களுக்கில்லை. ஈவிரக்கமற்ற ஓர் இனப்படுகொலை மூலம் இனத்தையும், நிலத்தையும் பறிகொடுத்துவிட்டு நாதியற்று நிற்கிற எங்கள் நிலை உலகில் வேறெந்த இனத்திற்கும் வேண்டாம் என்றுதான் தமிழர்கள் நாங்கள் இறைஞ்சுகிறோம்.

ஆகவே, சிரியா அரசாங்கத்திற்கு எதிரான கிளர்ச்சியாளர்கள் மீதானத் தாக்குதல் எனும் பெயரில் அம்மண்ணின் மக்கள் படுகொலை செய்யப்படுவதை தமிழர்கள் நாங்கள் ஒருபோதும் அனுமதியோம். ‘யாதும் ஊரே! யாவரும் கேளிர்’ எனும் உயர்நெறியை வாழ்வியல் வழியாகக் கொண்டிருக்கிறத் தமிழர்கள் சிரிய மக்கள் மீதான தாக்குதலைத் தன்னினத்தின் மீது தொடுக்கப்பட்டத் தாக்குதலாகவே கருதுகிறார்கள். 

எனவே, இவ்விவகாரத்தில் தமிழர்களின் எண்ணவோட்டத்தை பிரதிபலிக்கும் விதமாகவும், மானுடப்பற்றோடும் சிரிய மக்கள் மீது தொடுக்கப்படும் போரை, அம்மானுடப்படுகொலையை உடனே தடுத்து நிறுத்த வேண்டும் எனவும், போரினால் பாதிக்கப்பட்டு காயம்பட்டு நிற்கிற சிரியா மக்களுக்கு செஞ்சிலுவை சங்கத்தின் மூலம் உதவிசெய்து உயிரைக் காக்க வேண்டும் எனவும் ஐ.நா. பெருமன்றத்திடம் வலியுறுத்த மத்திய அரசிற்குக் கோரிக்கை விடுக்கிறேன்.’’


{[['']]}

உயிரைத் துச்சமென நினைத்து சிரிய மக்களை காப்பாற்றும் ஒயிட் ஹெல்மெட் குழுவினர்!

சிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரால் அந்நாட்டு பொதுமக்கள் பல்வேறு பாதிப்புகளைச் சந்தித்து வருகின்றனர். தொடர்ந்து வானிலிருந்து விழும் குண்டுகள் ஏற்படுத்தும் வெடிப்புகளில் உடல் சிதறி ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான மக்கள் செத்து மடிகின்றனர். இந்தத் தாக்குதல் சமயங்களில் வெள்ளை தலைக்கவசம் அணிந்த ஒரு குழு, சரிந்த கட்டிடங்களுக்கு இடையில் சிக்கிக் கொண்டிருப்பவர்களை முடிந்தவரை உயிருடன் மீட்டுக் கொண்டிருக்கிறது.

ஜேம்ஸ் லி மெஜூரியர் என்பவரால் தொடங்கப்பட்ட இந்த தன்னார்வலர் அமைப்பு கடந்த 2014ஆம் ஆண்டிலிருந்து இந்த சேவையைச் செய்து வருகிறது. இந்த அமைப்பில் ஏராளமான பெண்கள் உட்பட 3ஆயிரம் தன்னார்வலர்கள் செயல்பட்டு வருகின்றனர். மேலும், இந்த அமைப்பில் உள்ளவர்கள் பொறியாளர்கள், ஓவியர்கள், வங்கி ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் ஆவர்.

சிரியாவில் பொதுமக்களின் மீது எப்போதெல்லாம் தாக்குதல் நடத்தப்படுகிறதோ, அப்போதெல்லாம் தலையில் வெள்ளைக் கவசம் அணிந்துகொண்டு இந்தக் குழுவினர் மீட்புப் பணிகளுக்குக் கிளம்பிவிடுகின்றனர். மீட்புப் பணிகள் மட்டுமல்லாது மற்ற நேரங்களில் சிரிய மக்களுக்கு இவர்கள் தாக்குதல்கலில் இருந்து காத்துக்கொள்ளும் முறைகளையும் கற்றுத் தருகின்றனர். 
மீட்புப் பணியில் ஈடுபடும் இந்த வெள்ளை ஹெல்மெட் படையினரும் பல பாதிப்புகளைச் சந்திக்கின்றனர். தாக்குதலில் ஈடுபடும் சிரிய வீரர்கள் இவர்களைக் குறிவைக்கவும் தவறுவதில்லை. இருந்தாலும், எப்படியேனும் நம்மால் முடிந்தவரை அப்பாவி மக்களைக் காப்பாற்றி விடவேண்டும் என்ற எண்ணத்துடன் இந்த வெள்ளை ஹெல்மெட் குழுவினர் உயிரைத் துச்சமென எண்ணி மீட்புப் பணிகளில் ஈடுபட்டு, இதுவரை 99,200 பேரை உயிருடன் மீட்டுள்ளனர்.


{[['']]}

சிரிய அகதிகளிடம் பாலியல் ஆதாயம்: சர்வதேச அமைப்புகள் மேல் புகார்!

சிரியப் போரால் அகதியாகத் தஞ்சமடைந்திருக்கும் அகதிகளுக்கு, உதவிப்பொருட்களை வழங்குபவர்கள் பெண்களிடம் பாலியல் ஆதாயம்பெற முயற்சிப்பதாக புகார் எழுந்துள்ளது.

ஏழாண்டுகளுக்கு மேலாக நடந்துவரும் சிரியப் போர், கடந்த சில மாதங்களாகத் தீவிரமடைந்துள்ளது. போரில், ஆயிரக்கணக்கான பேர் பலியாகிவருகிறார்கள். நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்து அடுக்கிவைக்கப்பட்டிருக்கும் காட்சி மனதை உறையச்செய்வதாக இருக்கிறது.

இந்நிலையில் ஐ.நா.வின் ‘வாய்ஸஸ் ஃபரம் 2018’ அறிக்கையில் இந்தக் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. இடம்பெயர்ந்து அகதிகளாகத் தங்கியுள்ள சிரியப் பெண்களுக்கு சர்வதேச நாடுகளிலிருந்து செல்லும் உணவு மற்றும் சோப்பு, ஆடைபோன்ற உதவிப் பொருட்களை பல்வேறு லாபநோக்கமற்ற சர்வதேச அமைப்புகள் வழங்கிவருகின்றன.

உதவி வழங்கும் அமைப்புகள் மணமான, மணமாகாத சிரியப் பெண்களின் தொடர்பு எண்களைப் பெற்றுக்கொண்டு வீட்டுக்கு அழைக்கின்றனர். சில இடங்களில் லிஃப்ட் கொடுத்து வீட்டுக்கு அழைத்துச்சென்று செக்ஸுக்குப் பின் அவர்களுக்கு உதவிகள் வழங்கப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. 2015-லேயே இத்தகைய குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதை பிபிசியும் உறுதிசெய்தது.
போரில் ஈடுபடும் வீரர்கள் அத்துமீறலில் ஈடுபடுவதும், சர்ச்சைக்குள்ளாவதும் வாடிக்கை. மாறாக, அவர்களுக்கு உதவிசெய்யப் போகிற சர்வதேசத் தொண்டு நிறுவன உறுப்பினர்களே இத்தகைய அத்துமீறலில் ஈடுபடுவதற்கு எதிராக கண்டனக் குரல்கள் எழுந்துவருகின்றன.



{[['']]}

சிரியாவில் பல நாடுகளின் அடிகளும் பதிலடிகளும்

2011-ம் ஆண்டு சிரியாவில் அரசுக்கு எதிராக மக்கள் செய்த கிளர்ச்சியில் பல அமைப்புக்கள் இணைந்து கொண்டன. பல புதிய அமைப்புக்களும் உருவாகின. சிரியத் தேசிய சபை, சுதந்திர சிரியப்படை. ஜபத் அல் நஷ்ரா, இசுலாமிய சகோதரத்துவ அமைப்பு, மதசார்பற்ற மக்களாட்சிக்கான அமைப்பு, டமஸ்கஸ் பிரகடன அமைப்பு, சிரிய மக்களாட்சிக் கட்சி, சிரியப் புரட்சிக்கான உச்ச சபை, சிரிய உள்ளூர் ஒருங்கிணைப்புக் குழு,  மக்களாட்சி மாற்றத்திற்கான தேசிய ஒருங்கிணைப்புக் குழு, தேசிய மக்களாட்சி அணி, சிரியப்புரட்சிக்கான தேசிய ஆணையகம், சிரிய விடுதலைப்படை, சிரிய இசுலாமிய முன்னணி, சிரியத் தேசிய விடுதலை முன்னணி, விடுதலைக்கும் மாற்றத்துக்குமான முன்னணி...........



இப்படி இனும் பல படைக்கலன் ஏந்திய குழுக்களும், மத அமைப்புக்களும் அரசியல் கட்சிகளும் சிரிய அதிபர் பஷார் அல் அசாத்திற்கு எதிராகச் செயற்பட்டன. இவற்றில் சுதந்திர சிரியப்படை ஐக்கிய அமெரிக்காவை சார்ந்த ஓர் அமைப்பாகும். ஜபத் அல் நஷ்ரா  அல் கெய்தாவைச் சார்ந்த ஓரு அமைப்பாகும். 

தீர்க்க முயலாத ஐநாவும் தீர்க்க முடியாத மனித உரிமைக் கழகமும்

ஐ எஸ் அமைப்புக்கு எதிரான போர் நடக்கும் போது ஏற்பட்ட அப்பாவிகளின் அவலத்திலும் அதிக அவலம் இப்போது சிரியாவில் நிலவுகின்றது. சிரியப் பிரச்சனை தொடர்பாக ஜெனீவா மனித உரிமைக்கழகத்தில் 2018 பெப்ரவரி இறுதியில் விவாதிக்கப்பட்டது. கையாலாகாத அமைப்பாகிய மனித உரிமைக்கழகம் ஐநா பாதுகாப்புச் சபையால் கூட கொண்டுவர முடியாத அமைதியை சிரியாவில் கொண்டு வர முடியுமா? 

சிரியா தொடர்பாக ஐநா ஒரு சிறப்பு சமாதானத் தூதுவராக முன்னாள் பொதுச் செயலாளர் கோஃபி அனனை நியமித்ததூதுவராக நியமித்தது. அவர் சிரியாவில் பட்டபாடு பெரும் பாடு. கோஃபி அனன் அரபு நாட்டு மக்களினதும் ஊடகங்களினதும் கருத்துக்குப் பயப்படுகிறார் என்று சில அரசதந்திரிகள் குற்றம் சாட்டினார்கள். 

கோஃபி அனன் ஆபிரிக்க ஊடகங்களைத் தவிர்க்கிறார் மேற்குலக ஊடகங்களுக்கு மட்டுமே பேட்டிகள் கருத்துக்கள் தெரிவிக்கிறார் என்று ஆபிரிக்க ஊடகங்கள் குற்றம் சாட்டின. கோஃபி அனன் சமர்ப்பித்த ஆறு அமசத் திட்டம் சிரிய அதிபர் பஷார் அல் அசாத்திற்கு மிகவும் தேவையான கால அவகாசத்தை வழங்கி அவரைப் பாதுகாக்க உதவும் என்றனர் அமெரிக்க அரசதந்திரிகள். 

நியூயோர்க் ரைம்ஸ் பத்திரிகை. கோஃபி அனன் சமர்ப்பித்த ஆறு அம்சத் திட்டத்தின் ஒவ்வொரு அம்சமும் ஒவ்வொரு பொறியாகும் என்கிறது நியூயோர்க் ரைம்ஸ். மேலும் அது தெரிவிக்கையில் கோஃபி அனனின் திட்டம் சுதந்திர சிரியப் படையினருக்கு படைக்கலன்கள் போய்ச் சேர்வதைத் தடுக்கும் என்றது. அதனால் சிரியக் கிளர்ச்சியாளர்கள் பெரும் பின்னடைவைச் சந்திப்பினர் என்றது. 

இஸ்ரேலிய ஊடகம் ஒன்று பதினேழாயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர் அதனால் கோஃபி அனன் படுதோல்வியைச் சந்தித்தார் என்றது. ரைம்ஸ் ஒஃப் இந்தியா கோஃபி அனன் தனது சிரிய சமாதான முயற்ச்சி தோல்வியடைந்தது என்கிறார் என்றது. ஆனால் கோஃபி தனது கோரிக்கைகளுக்கு ஐநா பாதுகாப்புச் சபை செவிசாய்க்கவில்லை எனக் குற்றம் சாட்டினார். 

அரபு வசந்தத்தை இலையுதிர் காலமாக்கிய ஐஎஸ்

2014-ம் ஆண்டு சிரியாவிலும் ஈராக்கிலும் அதிரடியாகக் களமிறங்கியது ஐஎஸ் என்னும் இஸ்லாமிய அரசு அமைப்பு. 2014-ம் ஆண்டு அது சிரியாவிலும் ஈராக்கிலும் 34,000 சதுர மைல்களைத் தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்தது. ஆயிரக்கணக்கானவர்களை அடிமைகளாகவும் வைத்திருந்தது. 

அப்பாவி யதீஷியர்களுக்கு எதிராக இனக்கொலை புரிந்து சிறுமிகள் உட்பட பல பெண்களை பாலியல் கொடுமைகளுக்கு உள்ளாக்கியது. இருபத்தியொன்றிற்கும் மேற்பட்ட நாடுகளில் அது தாக்குதல்களை நடத்தியது. சிரியாவில் மக்களாட்சி வேண்டிச் செய்யப்பட்ட எழுச்சி திசைமாறி ஐஎஸ் அமைப்பிற்கு எதிரான போராக மாறியது. ஈரான், சவுதி அரேபியா, துருக்கி போன்ற பிராந்திய வல்லரசுகளும் அமெரிக்கா, இரசியா ஆகிய உலக வல்லரசுகளும் ஐஎஸ் அமைப்பிற்கு எதிராகத் தக்குதல் நடத்தின.

அமைப்புகளிடை மோதல் நாடுகளிடை மோதலாகியது

இதுவரை ஐஎஸ் எனப்படும் இஸ்லாமிய அமைப்பிற்கும் மற்ற மதவாதப் படைக்குழுக்களுக்கும் எதிரான போர் நடந்த சிரியாவில் ஈரானும் இஸ்ரேலும் ஒரு புறம், அமெரிக்காவும் இரசியாவும் ஒரு புறம், துருக்கியியும் குர்திஷ்களும் இன்னொரு புறம் என மோதலகள் உருவாகியுள்ளன. தீவிரவாத அமைப்புக்களுக்கு எதிரான போர் நடந்த சிரியா இப்போது பிராந்திய வல்லரசுகளுக்கும் உலக வல்லரசுகளுக்கும் இடையிலான மோதல் களமாக மாறும் ஆபத்து உருவாகியுள்ளது.

பழம் பெரும் எதிரிகளான இஸ்ரேலும் ஈரானும்

1. 2018 பெப்ரவரி மாதம் 10-ம் திகதி இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள சிரியாவிற்குச் சொந்தமான கோலான் குன்றுகளுக்குள் ஈரானின் ஆளில்லா விமானங்கள் பறந்தன. அதை இஸ்ரேலிய உலங்கு வானூர்திகள் சுட்டு வீழ்த்தின.

2. ஈரான் ஆளில்லா விமானங்கள் பறக்கவிடப்பட்ட சிரியாவின் பல்மேரியா பிராந்தியத்தில் உள்ள ரியாஸ் வான்படைத்தளத்தின் மீது எட்டு இஸ்ரேலிய F-16 போர்விமானங்கள் தாக்குதல் நடத்தி அதை அழித்தன. பல உயிரிழப்புக்களும் ஏற்பட்டதாகச் சொல்லப்படுகின்றது. 

3. தாக்குதல் நடத்திவிட்டுத் திரும்பிச் செல்லும்போது இஸ்ரேலிய F-16கள் மீது சிரியப்படைகள் நடத்திய தாக்குதலில் ஒரு F-16 சுட்டு வீழ்த்தப்பட்டது. அது இஸ்ரேலியக் கட்டுப்பாட்டில் உள்ள பிராந்தியத்தில் விழுந்தது. விமானிகள் இருவர் உயிர் தப்பினர். 30 ஆண்டுகளுக்குப் பின்னர் ஓர் இஸ்ரேலிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. ஹிஸ்புல்லா இனிப்பு வழங்கி அதைக் கொண்டாடியது.

4. வல்லூறு என்னும் பட்டப்பெயரால் அழைக்கப்படும் ஒற்றை இயந்திரம் கொண்ட F-16 போர்விமானம்  ஒலியிலும் பார்க்க வேகமாகப் பறக்கக் கூடிய தனது விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டமைக்கு பழிவாங்க சிரியாவில் உள்ள மூன்று வான்பாதுகாப்பு நிலைகள் உட்பட பன்னிரண்டு இலக்குகள் மீது இஸ்ரேலிய வான்படையினர் தாக்குதல் நடத்தினர். சிரியாவிலுள்ள எட்டு சிரிய நிலைகள் மீதும் நான்கு ஈரானிய நிலைகள் மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. தாக்குதல் நடந்த துரிதத்தைப் பார்க்கும்போது இதை இஸ்ரேல் ஏற்கனவே திட்டமிட்டு வைத்திருந்தது என்கின்றனர் படைத்துறை நிபுணர்கள். 

இஸ்ரேல் மேலும் பல் தாக்குதல்கள் செய்ய முனைந்த போது இரசிய அதிபர் விளடிமீர் புட்டீன் இஸ்ரேலியத் தலைமை அமைச்சர் பெஞ்சமின் நெத்தன்யாஹூவுடன் தொடர்பு கொண்டு தாக்குதலை நிறுத்தும் படி விடுத்த வேண்டுகோளை இஸ்ரேல் ஏற்றுக் கொண்டது. புட்டீன் மிகவும் ஆத்திரமடைந்திருந்தார் எனவும் செய்திகள் தெரிவித்தன. சிரியாவில் ஈரானுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தும் இஸ்ரேலியப் படைத்தளபதிகளின் திட்டம் கைவிடப்பட்டது.

ஈரானுக்கு எதிராக இஸ்ரேலும் அமெரிக்காவும்

மேற்காசியாவின் இரு மோசமான எதிரிகளான ஈரானும் சிரியாவும் பல ஆண்டுகளுக்கும் பின்னர் நேரடியாக மோதிக் கொண்டன.

சிரியாவில் ஈரானியப் படைகளின் இருப்பை இஸ்ரேலும் அமெரிக்காவும் கடுமையாக எதிர்க்கின்றன. சிரியாவில் ஈரான் உறுதியாக நிலை கொண்டால் அது லெபனானையும் இலகுவில் ஹிஸ்புல்லா அமைப்பின் உதவியுடன் கைப்பற்றலாம். அது இஸ்ரேலுக்கு ஆபத்தான ஒன்றாகும். 

மத்திய தரைக்கடலில் ஈரானின் ஆதிக்க நிலப்பரப்பு நீண்டு செல்வதை அமெரிக்கா விரும்பவில்லை. அமெரிக்காவும் சிரியாவிலிருந்து ஈரானை வெளியேற்ற முயல்கின்றது.  ஈரானியப் படைகளும் ஹிஸ்புல்லா போராளிகளும் சிரியாவில் பரவலாக நிலைகொண்டுள்ளன. தற்போது அமெரிக்காவும் இஸ்ரேலும் அவற்றை வெளியேற்ற உறுதி பூண்டுள்ளன. 

அவை இரண்டும் இணைந்து செயற்படுவது போல வெளியில் காட்டிக் கொள்ளவதில்லை. சிரியாவில் ஹிஸ்புல்லா தலையிடத் தொடங்கியதிலிருந்து இஸ்ரேல் பல தடவை அங்கு விமானத் தாக்குதல் நடத்தியது. அவை இரகசியமாக நடத்தப்பட்டடன. கோலான் குன்றுகள் தனது ஆக்கிரமிப்பிற்கு கீழ் இருப்பதை எல்லா வகையில் பாதுகாக்க இஸ்ரேல் முயலும். இந்த மோதல்களைத் தொடர்ந்து இஸ்ரேலிய உயர் மட்டக்குழு அமெரிக்கா சென்று மேற்கொண்டு கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டின.

மியூநிச் மாநாட்டில் எதிரொலித்த சிரியா

ஜெர்மனியில் நடந்த மியூநிச் பாதுகாப்பு மாநாட்டில் இஸ்ரேலியத் தலைம அமைச்சர் இஸ்ரேல் சுட்டு வீழ்த்தியதாகச் சொல்லப்படும் ஈரானிய ஆளில்லாவிமானத்தின் பாகத்தை உயர்த்திப் பிடித்துக் காட்டிக் கொண்டு ஈரானிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜாவட் ஜரீஃப் அவர்களின் பெயரைச் சொல்லி இது உங்களுடையது. மேலும் அவர் உங்கள் கொடுங்கோலர்களுக்குச் சொல்லுங்கள் இஸ்ரேலின் உறுதிப்பாட்டை சோதித்துப் பார்க்க வேண்டாம் என்றார். 

பின்னர் அங்கு பதிலளித்த ஈரானிய அமைச்சர் நெத்தன்யாஹூ செய்தது கோமாளித்தனமானது என்றார். ஆனால் ஈரானின் முன்னாள் படைத்தளபதி ஈரானில் கருத்துத் தெரிவிக்கையில் இஸ்ரேலியத் தலைநகர் டெல் அவீவ் தரைமட்டமாகும் இஸ்ரேல் அழிக்கப்படும், பெஞ்சமின் நெத்தன்யாஹூ கொல்லப்படுவார் எனச் சூளுரைத்தார். லெபனானில் செயற்படும் ஹிஸ்புல்லா அமைப்பிற்கு ஈரான் துல்லியமாகத் தாக்குதல் செய்யக்கூடிய ஏவுகணைகளை வழங்க முயல்கின்றது என்றார் நெத்தன்யாஹூ.

சிரியாவும் துருக்கியும் மோதல்

சிரியாவின் வட பிராந்தியத்தில் ஐஎஸ் படையினரை விரட்டிய குர்திஷ் போராளிகள் அதைத் தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றனர். சிரியாவிலோ ஈராக்கிலோ குர்திஷ் போராளிகள் தமக்கு என ஒரு கட்டுப்பாட்டுப் பிரதேசத்தை வைதிருப்பதை விரும்பாத துருக்கி அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ள அஃப்ரின் நகரை ஆக்கிரமித்தது. அங்கு குர்திஷ் போராளிகளுக்கும் துருக்கியப் படைகளுக்கும் இடையில் மோதல் உருவானது. 

தனது நாட்டுக்குள் துருக்கியப் படைகள் வந்தது தனது இறையாண்மைக்கு இழுக்கு என்பதால் சிரிய அரச படைகள் அஃப்ரின் நகருக்குள் சென்று துருக்கியப் படைகளுடன் சண்டையிடுகின்றன. சிரிய அதிபர் பஷார் அல் அசாத்தைப் பதவியில் இருந்து அகற்ற விருப்பம் கொண்டுள்ள துருக்கி சிரியாவுடன் ஒரு போருக்குத் தயார் என அறிவித்துள்ளது. துருக்கி அஃப்ரினில் செய்த படை நடவடிக்கையில் தனது படையில் 30 உயிரிழப்பு ஏற்பட்டதாகத் தெரிவித்துள்ளது. உண்மையான எண்ணிக்கை அதிலும் அதிகமாகும். 

1974-ம் ஆண்டு துருக்கி சைப்பிரசில் 60,000 படையினரை இறக்கி ஒரு மாதம் சண்டையிட்டு 570 படையினரின் இழப்புக்களுடன் தனது நோக்கத்தை நிறைவேற்றியிருந்தது. அஃப்ரின் நகருக்குள் 6400 படையினரை இறக்கியதாக துருக்கி அறிவித்த போதிலும் உண்மையான எண்ணிக்கை பதினையாயிரம் முதல் இருபதினாயிரம் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அஃப்ரினில் துருக்கியின் எண்ணம் நிறைவேறுமா என்பது கேள்விக்குறி. அஃப்ரினில் துருக்கிக்கு எதிரான போரில் குர்திஷ் போராளிகளுக்கு அமெரிக்கா உதவ மாட்டேன் எனக் கைவிரித்து விட்டது.

அமெரிக்க துருக்கி முறுகல்

சிரியப் பிரச்சனையால் துருக்கிக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உறவு கடந்த சில மாதங்களாக மோசமடைந்துள்ளது. 2018 பெப்ரவரி நடுப்பகுதியில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு நெருக்கடிப் புள்ளியில் இருக்கின்றது என்றார் அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலர் ரெக்ஸ் ரில்லர்சன்.

இதற்கான காரணம் குர்திஷ் போராளிகளுக்கு அமெரிக்கா படைக்கலன்களையும் பயிற்ச்சிகளையும் வழங்குவதே. இதைச் சீர் செய்ய பெப்ரவரி மூன்றாம் வாரம் ரில்லர்சனுடன் அமெரிக்க பாதுகாப்புத் துறைச் செயலர் ஜிம் மத்தீஸ், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எச் ஆர் மக்மஸ்ரர் ஆகியோர் துருக்கி சென்று ஆழமான கலந்துரையாடல் செய்துள்ளனர்.

இரசியர்களைக் கொன்ற அமெரிக்கா

2018 பெப்ரவரி 7-ம் திகதி சிரிய அரச படையினரும் இரசியாவின் தனியார் படையினரும் இணைந்து அமெரிக்க ஆதரவு படைக்குழுக்களின் கட்டுப்பாட்டில் உள்ள அல் ரபியா நகர்மீது தாக்குதல் நடத்தினர். அமெரிக்கப்படையினரும் அவரது ஆதரவுப் படையினரும் நடத்திய பதில் தாக்குதலில் பல இரசியர்கள் கொல்லப்பட்டனர். சிரியாவின் இரசியர்கள் பலர் கொல்லப்பட்ட தாக்குதல் இதுவாகும். இரசிய அரசு பல தனியார் படைகளை சிரியாவில் களமிறக்கியுள்ளது. 

தனது படையினருக்கு ஏற்படும் உயிரிழப்பை இரசியா பகிரங்கமாகத் தெரிவிக்க வேண்டும். அதைத் தவிர்ப்பதற்காகவே தனியார் படைகள். தனியார் படை என்பது கூலிப்படைக்கான கௌரவப் பெயராகும். இரசிய தனியார் படையினர் அமெரிக்க நிலைகள் மீது தாக்குதல் செய்தது இரசிய அரசின் உத்தரவிலா என்ற கேள்வி முன்வைக்கப்பட்டுள்ளது. இரசியப் படையினர் அமெரிக்க ஆதரவுப் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசங்களில் தாக்குதல் நடத்தினால் அமெரிக்கா எப்படி நடந்து கொள்ளும் என அறியவே இத்தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்ற ஊகமும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

புட்டீனின் நெருங்கிய நண்பரான Yevgeny Prigozhin என்பவரே இரசியாவில் தனியார் படைக்குப் பொறுப்பாகவுள்ளார். அமெரிக்கத் தேர்தலில் தலையிட்டமைக்காக Yevgeny Prigozhin எதிராக அண்மையில் குற்றப்பத்திரிகையும் சமர்ப்பிக்கப் பட்டுள்ளது. தனது இழப்புக்களுக்குப் பழிவாங்கும் முகமாக இரசியா இனின் என்ன நடவடிக்கை எடுக்க்ப் போகின்றது என்பதும் அதன் விளைவுகளும் சிரியாவில் பெரும் மோதலை உருஆக்கலாம்.

ஐஎஸ் அமைப்பு முற்றாக ஒழிக்கப்படவில்லை
ஐஎஸ் அமைப்பு சிரியாவில் இருந்து இன்னும் முற்றாக ஒழிக்கபப்டவில்லை. ஆங்காங்கே பல சிறிய நிலப்பரப்புக்களை அவர்கள் தமது கட்டுப்பாட்டின்கீழ் வைத்திருக்கின்றார்கள். மெய்நிகர் நாணயத்தின் (Crypto-currency or simply bitcoins) புழக்க அதிகரிப்பு அவர்களின் நிதி திரட்டலை இப்போது அதிகரித்துள்ளது. அவர்கள் சிரியாவில் மீளவும் எழுவதற்கான வாய்ப்பை நிராகரிக்க முடியாது.

இரசியாவின் ஆதரவு இருக்கும் வரை அதிபர் பஷார் அல் அசாத்தின் ஆட்சியை அசைப்பது மிகவும் கடினம் என்ற நிலை 2016-ம் ஆண்டே உருவாகிவிட்டது. ஆனால் 75 விழுக்காட்டிலும் அதிகமான சனி இஸ்லாமியர்களைக் கொண்ட சிரியாவில் சியா இஸ்லாமியர்களின் ஒரு பிரிவான அல்வைற் இனக்குழுமத்தைச் சேர்ந்த பஷார் அல் அசாத்தால் அமைதியான ஆட்சியை நடத்த முடியாது. சிரிய இரத்தக் களரிக்கு அண்மையில் முடிவு இல்லை.
{[['']]}

ஆப்கானிஸ்தான் இராணுவத் தளம் மீது தலிபான்கள் தாக்குதல் : 18 வீரர்கள் பலி!!!


ஆப்கானிஸ்தானில் பரா மாகாணத்தில் அமைந்த இராணுவ தளம் மீது தலிபான்கள் இன்று நடத்திய தாக்குதலில் 18 வீரர்கள் பலியாகியுள்ளனர். ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான்கள் ஆதிக்கம் செலுத்தி பொதுமக்கள் மீது தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந் நிலையில் ஆப்கானிஸ்தான் நாட்டின் பரா மாகாணத்தில் பாலா புளுக் மாவட்டத்தில் அமைந்துள்ள அந்நாட்டின் இராணுவ தளம் ஒன்றின் மீது தலிபான்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இச்சம்பவத்தில் 18 வீரர்கள் பலியாகியுள்ளனர் மேலும்  2 வீரர்கள் காயமடைந்துள்ளனர். இதனை தொடர்ந்து அப் பகுதியின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இத்  தாக்குதலுக்கு தலிபான்  அமைப்பு பொறுப்பேற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.


{[['']]}

திருமணப் பரிசாக வந்த வெடிகுண்டு பார்சல்; மணமகன், பாட்டி பலி; மணமகள் உயிருக்குப் போராட்டம்

புதிதாகத் திருமணம் செய்து கொண்ட தம்பதிகள் தங்களுக்கு வந்த திருமணப் பரிசுகளை ஆசையாகப் பிரித்து கொண்டிருந்த போது ஒரு பார்சலில் வந்த வெடிகுண்டு வெடித்து மணமகன், மணமகன் பாட்டி ஆகியோர் உயிரைப் பலிவாங்கிய சம்பவ அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த குண்டு வெடிப்பில் மணமகள் பயங்கரக் காயம் அடைந்து மருத்துவமனையில் உயிருக்குப் போராடி வருகிறார்.

இம்மாதம் பிப்ரவரி 18-ம் தேதி ஒடிசாவின் பட்நாகரைச் சேர்ந்த சவுமியா சேகர் சாஹுவுக்கும் பவுத் மாவட்டத்தைச் சேர்ந்த ரீமா சாஹுவுக்கும் பெரியோர்களால் நிச்சயக்கப்பட்டு திருமண வைபவம் நடந்தது.

இந்நிலையில் வெள்ளிக்கிழமையன்று மணமக்களுக்கு ராய்ப்பூரிலிருந்து பார்சல் ஒன்று வந்துள்ளது, அதாவது பார்சலில் திருமணப் பரிசு என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தப் பார்சலைக் கொண்டு வந்து அளித்த நபர் முன்பின் பழக்கமில்லாதவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பார்சலை எடுத்துக் கொண்டு சவ்மியா சேகர் தன் பாட்டியின் அறைக்குச் சென்று பிரித்துள்ளார். அப்போது பெரிய சப்தத்துடன் குண்டு வெடித்தது.

பெரிய வெடிச்சத்தம் ஏற்பட அக்கம்பக்கத்திலுள்ளவர்கள் பீதியடைந்து வந்து பார்த்த போது அதிர்ச்சியடைந்து போலீஸுக்குத் தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வண்டிக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸ் வந்து காயமடைந்த மணமகன், மணமகள், பாட்டி ஆகியோரை மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் அழைத்துச் சென்றனர்.
இதன் பிறகு சிகிச்சை பயனளிக்காமல் பாட்டி உயிரிழந்தார். மணமகன் சவ்மியா சேகரை புர்லா மருத்துவமனைக்கு மாற்றும் போது பரிதாபமாக உயிர் பிரிந்தது. ரீமா சாஹு உயிருக்குப் போராடி வருகிறார்.
பட்னாகர் எஸ்டிபிஓ விசாரணைக்கு உத்தரவிட்டார், தடயவியல் நிபுணர்கள், மோப்ப நாய்களும் சம்பவ இடத்துக்கு அனுப்பப்பட்டன. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

{[['']]}

மாவீரர் வாரத்தை முன்னிட்டு யேர்மன் அரசாங்கத்துடன் நடைபெற்ற உயர்மட்ட அரசியற்சந்திப்பு , அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை



தமிழீழ மண்ணுக்காய் தம்முயிரை ஈகம் செய்த மாவீரர்களின் நினைவுசுமந்த இப்புனித நாட்களை முன்னிட்டு நேற்றைய தினம் யேர்மன் அரசாங்கத்தின் சிறிலங்காவுக்கு பொறுப்பான உயரதிகாரியுடன் யேர்மன் இளையோர் அமைப்பு பிரதிநிதியும் , அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை பிரதிநிதியும் முக்கிய சந்திப்பை மேற்கொண்டனர்.

இச் சந்திப்பில் தாயகத்தில் ஈழத்தமிழர்கள் எதிர்நோக்கும் கட்டமைப்புசார் இனவழிப்பை பற்றியும் , சிறிலங்கா அரசு கொண்டுவரவிருக்கும் புதிய அரசிலமைப்பு தொடர்பான இடைக்கால அறிக்கை பற்றியும் நீண்ட உரையாடல் அமைந்தன.

இலங்கை அரசியலமைப்புச் சபையின் வழிப்படுத்தும் குழுவின் இடைக்கால அறிக்கை தொடர்பாக அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை பிரதிநிதி கருத்து தெரிவிக்கையில்,

தமிழின அழிப்புக்கு சிறீலங்காவின் அரசியலமைப்புகள் சட்டரீதியில் வழிகோலியமையால் அதனை வரலாற்று ரீதியாக நிராகரித்து வந்த ஈழத்தமிழர்கள் , புதிய அரசியலமைப்பும் செயற்பாடுகளும் அந்த மூல நோக்கத்திலிருந்து வேறுபடாமையால் இந்த அரசியலமைப்பையும் எவ்வித நம்பிக்கையுமின்றி நிராகரிக்கின்ற கருத்துக்களையே தாயகத்திலும் புலத்திலும் வெளியிடுகின்றனர் எனவும் ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை நீர்மூலமாக்கும் நோக்கத்தையே புதிய அரசிலமைப்பு கொண்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

அதேநேரத்தில் யேர்மன் அரசாங்கம் ஐக்கியநாடுகள் மனிதவுரிமை சபையில் முழுநிறை காலமுறை மீளாய்வின் (UPR) 28 வது அமர்வு தொடர்பான தமது கருத்தை மேலும் பகிர்ந்துகொண்டதோடு, எதிர்வரும் சில மாதங்களில் சிறிலங்கா அரசு மிகவும் சில நெருக்கமான புறச்சூழலில் தமது வாக்குறுதிகளை நிறைவேற்றக் கூடிய நகர்வுகளை மேற்கொள்ள நிர்பந்திக்கப்படும் நிலை ஏற்படும் எனவும் தெரிவித்தார்.

இச் சந்திப்பில் யேர்மன் தமிழ் இளையோர் அமைப்பு சார்பாக கலந்துகொண்ட பிரதிநிதி தமிழர் தாயகத்தில் நிலவும் ராணுவமயமாக்கல் தொடர்பாக, “அடையாளம்” அமைப்பால் அண்மையில் வெளியிடப்பட்ட ஆவணத்தை மேற்கோள்காட்டி தனது கருத்துக்களை பகிர்ந்துகொண்டார். இதுதொடர்பாக யேர்மன் அரசாங்கத்தின் நிதியுதவியுடன் தமிழர் தாயகத்தில் முன்னெடுக்கப்படும் மாணவர்களுக்கான கல்விசார் நிகழ்வுகளில் சிங்கள ராணுவத் தளபதிகளிடமும் , அதிகாரிகளிடமும் தமிழ் மாணவர்கள் தலைகுனிந்து நிற்கும் காட்சிகள் வேதனைக்குரியது என்பதனையும் சுட்டிக்காட்டினார்.

இதுவரை எவ்வித பொறுப்புக்கூறலுக்கும் உடன்படாத நிலையில் இச் செயலின் ஊடாக தமிழின அழிப்பை மேற்கொண்ட சிறிலங்கா அரச ராணுவம், நல்லவர்களாகவும் , தமிழ் மக்களை காப்பாற்றுபவர்களாகவும் காட்சி அளிப்பதும், அதற்கு யேர்மன் அரசாங்கம் ஏதோ ஒருவகையில் வாய்ப்பை வழங்குவதும் பரிகார நீதிக்காக போராடிக்கொண்டிருக்கும் மக்களுக்கு நம்பிக்கைக் கதவை மூடுவதாக அமைகின்றது என்பதாக தொடர்ந்து கூறினார்.

நடைபெற்ற சந்திப்பின் நிறைவில் அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை சார்பாக சமகால அரசியல் கருத்துக்களை உள்ளடக்கிய ஆவணங்கள் யேர்மன் அரசின் வெளிவிவகார அமைச்சின் உயரதிகாரிக்கு கையளிக்கப்பட்டது.கடந்த காலமாக தொடர்ச்சியாக நடைபெற்று வரும் இவ்வாறான சந்திப்புகள் எதிர்வரும் காலங்களிலும் தொடரவேண்டும் எனும் வேண்டுகோளை வெளிவிவகார அமைச்சின் உயரதிகாரி தெரியப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
ஈழத்தமிழர் மக்கள் அவை – யேர்மனி
தமிழ் இளையோர் அமைப்பு – யேர்மனி
‘தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்’
அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை.
{[['']]}

India-Sri Lanka ties improved in 2016, concern over China remains: report

Sri Lanka’s ties with India improved in 2016 with high-level exchanges and signing of agreements to give momentum to their relationship, even as issues over a proposed economic and technology pact, poaching by fishermen in each other’s water and China’s influence in the island nation remained. Historically, 

bilateral ties have been fraught with controversies. In the 1980s, the Tamil question dominated relations and more recently differences have sometimes erupted over poaching by fishermen and Sri Lanka’s increasing dependence on China for investment. But with a change in government in India and Sri Lanka last year, the ties in 2016 showed signs of maturity, 

breaking away from the past towards an era of synergy and understanding. One of the defining moments in bilateral ties this year came when Sri Lanka pulled out of the SAARC Summit, which was scheduled in November in Pakistan, after India boycotted the meet over an attack on an Indian army base in Jammu and Kashmir by Pakistan-based terrorists. In November, 

Navy chief Admiral Sunil Lanba visited Colombo during which he attended the Galle Dialogue - a meeting of regional navies at the southern coastal city. The visit was aimed at consolidating bilateral maritime security relations amid an increasingly assertive China in the region. 

 The increasing dependence on China for investment and military aid curtailed Sri Lanka’s ability to limit Beijing’s influence in its economic and maritime policy. China has been keen to push its economic and infrastructure proposals to the Indian Ocean states.

India focused on economic consideration to boost ties with Sri Lanka. The Sri Lankan government too appeared interested in building the country through economic ties with India. During his visit to India in the first week of October, Prime Minister Ranil Wickremesinghe said Sri Lanka expected to sign an Economic and Technology Co-operation Agreement (ETCA) with India by the end of this year. Wickremesinghe appeared keen to fast-track the ETCA, 

given the needs arising from Britain’s decision to leave the 28- member European Union economic bloc. The ETCA advocates believe the pact was an imperative to mitigate the effects of Britain’s exit from the EU. The progress on ETCA has been discouraging, however, and some have doubted the benefits of the agreement. Sri Lanka’s Joint Opposition has said the agreement was an “appeasement” of India, ignoring the greater largesses from China. 

 Opposition legislator, Wimal Weerawansa, said: “With the ETCA, it looks as if the government is keen to help India solve its unemployment problem. They are creating one million jobs for the Indians.” But President Maithripala Sirisena defended his government’s decision to enter into the agreement with India, saying protests against it were “politically motivated. Harsha de Silva, the deputy foreign minister, had said of the opposition the ETCA: “It must be noted that Sri Lanka’s exports to India have been rising in the past few years... 

Signing the ETCA would, therefore, strengthen bilateral trade between the two countries. Rejecting the agreement would undoubtedly affect this market.” India’s Commerce and Industry Minister Nirmala Sitharaman, too, has boldly dismissed any misgivings about ETCA during her visit to Sri Lanka in September. Another area of concern in Indo-Lanka ties this year remained the complexities associated with the ongoing fishermen issue. 

The dispute has earlier escalated tension, and brings to the equation the issue of ceding Kachchatheevu to Sri Lanka by India in 1974. Sri Lankans are averse to permit licensed Indian fishermen to fish within a “designated area” in their waters. “We are not in agreement with this,” Fisheries Minister Mahinda Amaraweera has said. It has been argued that moderates in Sri Lanka and India want a settlement and ensure the livelihood of fishermen are protected, yet the official response of both the governments to the fishermen’s dialogue has been lukewarm. 

 Soon before the navy chief’s visit to Sri Lanka, former president Mahinda Rajapaksa visited Beijing to meet top Chinese leadership. Before he began his visit, he accused India of adopting a “softer line” towards his successor President Maithripala Sirisena. Rajapaksa mentioned to reporters in Colombo the “tension” his administration encountered with India. “They (India) were furious when (Chinese) submarines docked at Colombo. From what I know, the Chinese inform the Indian embassy in Beijing before a submarines enters the Indian Ocean. 

But they made a huge cry about it.” China was Rajapaksa’s main international ally when it supported him at international fora and funded his mega development projects, mainly in his home district of Hambantota. Rajapaksa, during his two terms in office, was widely perceived as being close to Beijing. And his visit to China assumed significance in the wake of a recent public spat between Beijing and Colombo. 

Chinese Ambassador to Colombo Yi Xianliang had called a rare press conference and criticised Sri Lankan Finance Minister Ravi Karunanayake for his statement that Chinese had lent money to Rajapaksa government at high rates of interest. The challenge for Sri Lanka, as earlier, is to establish a state of relative equilibrium in its relations with India and China. Source: PTI -Agencies
{[['']]}

Libyan plane hijack ends peacefully in Malta

Two hijackers of a Libyan aircraft with 118 people on board surrendered to authorities on the island of Malta hours after claiming to have hand grenades and threatening to blow the plane up unless their demands were met. 


Maltese Prime Minister Joseph Muscat said on Twitter that all passengers and crew had been safely released by Friday evening. The hijackers, Muscat said, had surrendered and been searched and taken in custody. 

One of the hijackers told the flight crew of the Afriqiyah Airways plane that he was pro-Gaddafi. Former Libyan leader Muammar Gaddafi was killed in an uprising in 2011, and the country has been racked by factional violence since. 

Libyan Foreign Minister Taher Siala confirmed the two hijackers were supporters of the slain dictator Gaddafi and had requested political asylum in Malta. Siala, from Libyas internationally backed Government of National Accord, said the hijackers also said they want to set up a pro-Gaddafi political party. -Agencies
{[['']]}

Christine Lagarde: IMF chief convicted over payout



A French court has found International Monetary Fund chief Christine Lagarde guilty of negligence but did not hand down any punishment.

As French finance minister in 2008, she approved an award of €404m ($429m; £340m) to businessman Bernard Tapie for the disputed sale of a firm.

 Ms Lagarde, who always denied wrongdoing, was not present in court, having left France for Washington. The IMF board will meet on Monday to consider the latest developments.

Meanwhile, the French government said it still had confidence in the IMF chief. On Friday, Ms Lagarde told the trial she had always acted in good faith and the suspicion she had lived under for the past five years had been an ordeal.

-Agencies  -
{[['']]}

Prosecutors say S.Korean president Park Geun-hye played a ‘ role’ in scandal

Prosecutors have said that South Korean President Park Geun-hye had a “considerable” part in a corruption scandal involving a close confidante including

According to Chief Prosecutor Lee Young-ryeol ,Ms Park was “involved as a conspirator” but was immune from prosecution.

Ms Park has confronted protests and opponents have called on her to resign.Ms Park, whose approval rating has dropped to 5%, has apologized twice on national television but has so far resisted calls to resign.
{[['']]}

Thousands call for Malaysian P.M’s resignation

Thousands of protesters in yellow shirts had gathered in Malaysia’s capital, Kuala Lumpur, demanding the resignation of Prime Minsiter Najib Razak.

The protesters demand that Mr Najib face charges over allegations of looting his brainchild investment fund, 1MDB. Demonstrators were undeterred by a police ban and the arrest of a number of activists ahead of the planned action

Mr Najib has denied any wrongdoing and says he will not be cowed by protests.
{[['']]}

Scenarios of possible Canadian involvement in Syria revealed

Internal documents obtained by a Canadian newspaper show that Ottawa has drawn up at least five scenarios in which it could be involved in the three-year Syrian conflict, including the deployment of Canadian Forces.


The Ottawa Citizen paper said on Monday that while Canada’s federal government has no official plans so far for the country to be dragged in the conflict, the National Defense has developed five scenarios to address the problem of “rapidly deteriorating conditions in Syria, its impact on neighboring countries and … the importance of Middle East stability.”

Military intervention is included in one of the potential scenarios, per the existence of is “a legitimate armed opposition group has been recognized” by Canada.

The scenarios rest on the several assumptions, such as the Syrian government remains “defiant,” and include possible outcomes for each plan, including those “most likely” and the “worst case.”

Worst case scenarios include extremist groups getting ahold of advanced or chemical weapons or the conflict spilling beyond Syria’s borders.

Further specifics about the remaining scenarios have been censored.

Theodore Karasik, the Dubai-based Director of Research and Consultancy at the Institute for Near East and Gulf Military Analysis (INEGMA), reasons that the conflict affects a myriad of countries not just in the region but globally.

“Many countries face the threat from the Syrian theater because jihadists there have gained incredible battlefield experience and were further indoctrinated of jihadist violence,” he told Al Arabiya News.

Karasik urged all countries prepare adequately if they intervene in the conflict which must include a contingency plan.

“Not only militaries but police forces have to be prepared as well,” he added.

While the United States and its main ally, the United Kingdom, have both had their parliaments veto a military airstrike against the Syrian regime over chemical weapons accusations last year, a source who spoke to Al Arabiya News on the condition of anonymity said “in [neighboring] Jordan, the Brits are on ground already, in special operations forces.”

Hinting at additional covert support from other nations, the source added: “It is to varying degrees of how these [NATO] countries are involved and under what circumstances.”

Additional documents show that Canada has already started training anti-sectarian activists, journalists and others so they can provide a political alternative to Islamic extremist groups if the fighting stops.
{[['']]}

Advertising

பிந்திய செய்திகள்

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Queen Lanka - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger